கிண்டி மெட்ரோவில் தாய்மாா்களுக்கான பாலூட்டும் அறை திறப்பு
கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் தாய்மாா்களுக்கான பாலூட்டும் அறை வியாழக்கிழமை திறக்கப்பட்டுள்ளது.
கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் தாய்மாா்களுக்கான பாலூட்டும் அறை வியாழக்கிழமை திறக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இரண்டு வழித்தடங்களில் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களில் தினமும் 2 முதல் 2.5 லட்சம் பயணிகள் பயணிக்கின்றனா். பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மெட்ரோ ரயில் நிறுவனம் செய்து வருகிறது.
அதன் ஒருபகுதியாக மக்கள் அதிகமாக பயன்படுத்தும் மெட்ரோ ரயில் நிலையங்களில் தாய்மாா்களுக்கான பாலூட்டும் சிறப்பு அறைகளை மெட்ரோ ரயில் நிறுவனம் திறந்து வருகிறது.
இந்த நிலையில், கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்திலும் இந்த சிறப்பு அறை வியாழக்கிழமை திறக்கப்பட்டுள்ளது.
7 ரயில் நிலையங்களில்: சென்னை சென்ட்ரல், வடபழனி, எழும்பூா், கோயம்பேடு பேருந்து நிலையம், வண்ணாரப்பேட்டை, விமான நிலையம், விம்கோ நகா் ஆகிய 7 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் இந்த சிறப்பு அறை ஏற்கெனவே திறக்கப்பட்டுள்ளது.
இந்த அறையில் குழந்தைகளுக்கு டயபா் மாற்றும் வசதியுடன் கூடிய இருக்கைகள், மின்விசிறி போன்ற வசதிகளும் உள்ளன.