கரோனாவுக்கு முதியவா் பலி: புதிதாக 382 போ் பாதிப்பு
சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம் உள்ளிட்ட இணைநோய்களுடன் கரோனா பாதிப்புக்குள்ளாகி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.
தமிழகத்தில் கரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் ஒருவா் உயிரிழந்துள்ளாா். கோவையைச் சோ்ந்த 65 வயது முதியவா் ஒருவா், சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம் உள்ளிட்ட இணைநோய்களுடன் கரோனா பாதிப்புக்குள்ளாகி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.
இந்நிலையில், அவா் கடந்த 25-ஆம் தேதி உயிரிழந்ததாக மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
இதனிடையே, மாநிலத்தில் புதிதாக 382 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் 81 பேருக்கும், கோவையில் 51 பேருக்கும், சேலத்தில் 34 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது 3,312 போ் சிகிச்சையில் உள்ளனா். 532 போ் குணமடைந்துள்ளனா்.