தமிழ்நாடு

சுதந்திர நாள்: பாதுகாப்புப் பணியில் 40 ஆயிரம் காவலர்கள்!

சென்னையில் மட்டும் 9 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

76வது சுதந்திர நாளையொட்டி சென்னையில் மட்டும் 9 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து முனையங்கள் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிக எண்ணிக்கையிலான காவலர்கள் பாதுகப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

தனியார் தங்கும் விடுதிகள், நட்சத்திர விடுதிகள், கேளிக்கை விடுதிகளிலும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடவுள்ளனர். 

இதேபோன்று சென்னையிலுள்ள முக்கிய சாலைகளிலும் தடுப்புகள் அமைத்து வாகன சோதனையில் காவலர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். 

இதற்காக சென்னையில் மட்டும் 9 ஆயிரம் காவலர்களும், தமிழ்நாடு முழுவதும் 40 ஆயிரம் காவலர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

இன்று மாலை 6 மணிக்கு கந்தசஷ்டி கவசம் வாசிக்க வேண்டும்! - நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜி சிலை திறப்பு!

தமிழகத்தில் மாவட்டவாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை! - முழு விவரம்

அரிஜித் சிங்கை மீண்டும் பாட வைத்த ஆமீர் கான்!

SCROLL FOR NEXT