முகப்பு
தமிழ்நாடு

நீட் தேர்வால் இதுவரை 16 மாணவர்கள் தற்கொலை!

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வால் தமிழகத்தில் இதுவரை 16 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:49 AM
பகிர்:

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வால் தமிழகத்தில் இதுவரை 16 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 

நீட் விலக்கு மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்கக்கோரி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

அதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நீட் தேர்வால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கையைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து, பிளஸ் 2 மதிப்பெண்கள் மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்திருந்தால், இதுபோன்ற சோக நிகழ்வுகளை நிச்சயம் தவிர்த்திருக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். 

தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு மசோதா, தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த கருத்தின் பிரதிபலிப்பு என்றும்,

அதனைச் செயல்படுத்துவதில் ஏற்படும் ஒவ்வொரு நாள் தாமதமும், தகுதியான மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கை கிடைப்பதில் பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு மட்டுமல்ல, சமுதாயத்தில் விலைமதிப்பற்ற மனித உயிரிழப்புகள் ஏற்படுவதற்குக் காரணமாக அமைகிறது எனவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.