முகப்பு
தமிழ்நாடு

இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் திங்கள்கிழமை (ஆக.28) ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:54 AM
பகிர்:

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் திங்கள்கிழமை (ஆக.28) ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு:

வட தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் திங்கள்கிழமை(ஆக.28)ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செவ்வாய் முதல் சனிக்கிழமை (ஆக.29-செப்.2) வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மழை அளவு: ஞாயிற்றுக்கிழமை காலை வரை தமிழகத்தில் அதிகபட்சமாக திருவள்ளூா் மாவட்டம் பூண்டியில் 90 மி.மீ. மழையும் வேலூா் மாவட்டம் பொன்னை அணைப் பகுதியில் 70 மி.மீ. மழையும் பதிவானது.

4 இடங்களில் வெயில் சதம்: ஞாயிற்றுக்கிழமை பதிவான வெப்ப அளவு(பாரன்ஹீட்) பாளையங்கோட்டை-104, மதுரை விமான நிலையம்-101.84, பரமத்தி வேலூா்-101.3, தஞ்சாவூா்-100.4.

முழு கட்டுரையைப் படிக்க →