கோப்புப்படம் 
தமிழ்நாடு

ஞாயிற்றுக்கிழமைகளில் மெட்ரோ ரயில்கள் நேரம் மாற்றம்

பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஞாயிற்றுக்கிழமை (டிச.3) முதல் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் சென்னை மெட்ரோ ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

DIN

பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஞாயிற்றுக்கிழமை (டிச.3) முதல் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் சென்னை மெட்ரோ ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஞாயிற்றுக்கிழமைகளில் மெட்ரோவில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், டிச.3 -ஆம் தேதி முதல் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மெட்ரோ ரயில்களில் அட்டவணை மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி, காலை 5 முதல் இரவு 11 மணி வரை ரயில்கள் இயக்கப்படும். இதில், காலை 5 முதல் பகல் 12 மணி வரை, இரவு 8 முதல் இரவு 10 மணி வரை 10 நிமிஷ இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும். பிகல் 12 முதல் இரவு 8 மணி வரை 7 நிமிஷ இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். இரவு 10 முதல் 11 மணி வரை 15 நிமிஷ இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT