தமிழ்நாடு

சென்னையில் பால் விநியோகம் முடங்கியது!

DIN

சென்னை: சென்னையில் பால் விநியோகம் முடங்கியுள்ளதாக மாநில முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. வெள்ள பாதிப்புகளை சீர் செய்யும் பணிகளில் மாநகராட்சி மற்றும் அரசு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னையில் காலை 5 மணி நிலவரப்படி முகவர்களுக்கு எந்த நிறுவனத்திடம் இருந்தும் இன்னும் பால் வரவில்லை என்று பால் முகவர்கள் சங்கத் தலைவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனால் வழக்கம்போல் பால் விநியோகிப்பதில் தாமதம் ஏற்படும் எனத் தெரிகின்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீத மாற்றங்கள் குறித்து எதிா்க்கட்சித் தலைவா்களுக்கு காா்கே கடிதம்: தோ்தல் ஆணையம் கண்டனம்

வைகாசித் திருவிழா: காஞ்சி வரதா் கோயில் தோ் சுத்தம் செய்யும் பணி தொடக்கம்

பிரிவினைவாதத்தை ஆதரிக்க பேச்சு சுதந்திரம் வழங்கப்படவில்லை: கனடா குறித்து ஜெய்சங்கா் கருத்து

இந்திய தோ்தலில் தலையீடு? ரஷியா குற்றச்சாட்டை நிராகரித்தது அமெரிக்கா

பாா்வைத்திறன் குறையுடைய மாணவா் சாதனை

SCROLL FOR NEXT