விருதுநகரில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிச. 18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடுவிருதுநகரில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிச. 18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிச. 18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது விருதுநகரிலும் பள்ளிகளுக்கு விடுமுறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால், தென்தமிழகத்தில் அநேக இடங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. அதோடு அண்டை மாவட்டங்களான ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விருதுநகரில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிச. 18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.