மத்திய அரசின் நிவாரண நிதி தேவை: மு.க.ஸ்டாலின்
வெள்ள பாதிப்பு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மத்திய அரசின் நிவாரண நிதி தேவை என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வெள்ள பாதிப்பு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மத்திய அரசின் நிவாரண நிதி தேவை என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மிக்ஜம் புயல் மற்றும் கனமழையால் தமிழ்நாடு பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளதால், உடனே மத்திய அரசு நிதி வழங்கி உதவ வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
படிக்க | பாஜகவுடன் மீண்டும் கூட்டணியா? எடப்பாடி பழனிசாமி பதில்
Advertisement
Advertisement
புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள மாநில பேரிடர் மீட்புத் துறையில் உள்ள நிதி போதாது என்றும்
சீரமைப்பு பணிகளுக்கான நிவாரண நிதி தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மனு அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதராமனிடம், நிவாரண நிதியின் அவசியத்தை வலியுறுத்தி 72 பக்கங்கள் கொண்ட மனுவை தங்கம் தென்னரசு அளித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.