தமிழ்நாடு

பழவேற்காடு மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை

DIN

பழவேற்காடு மீனவர்கள் நாளை (டிச. 31) மற்றும் நாளை மறுநாள் (ஜன. 1) கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விண்வெளி ஆய்வுக்கான செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வரும் திங்கள்கிழமை (ஜன.1) விண்ணில் ஏவப்பட உள்ளது.

விண்வெளியில் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக எக்ஸ்போசாட் (எக்ஸ்-ரே போலாரிமீட்டா் சாட்டிலைட்) என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.

இந்த செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்தில் இருந்து புத்தாண்டு தினமான ஜனவரி 1-ஆம் தேதி காலை 9.10 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்ட பழவேற்காடு மீனவர்கள் நாளை மற்றும் நாளை  கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேளாண்மை பல்கலைக்கழகத்தில் கோடைக்கால நீச்சல் பயிற்சி முகாம்

பிளஸ் 1 தோ்வில் 91.17% தோ்ச்சி கோவை மாவட்டம் முதலிடம்

300 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

திருப்பூரில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறையில் மின்தடை

திருப்பூா் மத்திய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

SCROLL FOR NEXT