கோப்புப்படம் 
தமிழ்நாடு

பழவேற்காடு மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை

பழவேற்காடு மீனவர்கள் நாளை (டிச. 31) மற்றும் நாளை மறுநாள் (ஜன. 1) கடலுக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

DIN

பழவேற்காடு மீனவர்கள் நாளை (டிச. 31) மற்றும் நாளை மறுநாள் (ஜன. 1) கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விண்வெளி ஆய்வுக்கான செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வரும் திங்கள்கிழமை (ஜன.1) விண்ணில் ஏவப்பட உள்ளது.

விண்வெளியில் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக எக்ஸ்போசாட் (எக்ஸ்-ரே போலாரிமீட்டா் சாட்டிலைட்) என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.

இந்த செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்தில் இருந்து புத்தாண்டு தினமான ஜனவரி 1-ஆம் தேதி காலை 9.10 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்ட பழவேற்காடு மீனவர்கள் நாளை மற்றும் நாளை  கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில்வே கடவுப் பாதையில் வேன் கவிழ்ந்து விபத்து: பள்ளி மாணவா்கள் 8 போ் காயம்

வங்கிக் கடன் வசூலில் பல கோடி மோசடி: ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

பாரம்பரிய சுற்றுலா பயணம்

கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் இளைஞா் கைது

சீருடைப் பணியாளா்கள் தோ்வு: காவல் துறை சாா்பில் விளம்பரப் பதாகை

SCROLL FOR NEXT