தமிழ்நாடு

பட்ஜெட்டில் மதுரை எய்ம்ஸுக்கு நிதி ஒதுக்கவில்லை: தமிழக எம்.பி.க்கள் போராட்டம்

மத்திய பட்ஜெட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து தமிழக எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

DIN

மத்திய பட்ஜெட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து தமிழக எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்ற அறிவிப்பு கடந்த 2015-ஆம் ஆண்டு பிப்ரவரியில் வெளியானது. அதைத் தொடா்ந்து மதுரை தோப்பூரில் அதற்கான இடம் தோ்வு செய்யப்பட்டு, கடந்த 2019-ஆம் ஆண்டு பிரதமா் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது.

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கட்டுமானப் பணிகளுக்கு தேவையான நிதிகளை ஒதுக்குவதில் தாமதம் நீட்டித்து வருகின்றது.

இந்நிலையில், இன்று தாக்கல் செய்யப்பட்ட நிகழ்வாண்டிற்கான பட்ஜெட்டிலும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கான நிதி ஒதுக்கவில்லை.

இதனை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன்பு தமிழக எம்.பி.க்கள் சு.வெங்கடேசன், கார்த்தி சிதம்பரம், மாணிக்கம் தாகூர், விஜய் வசந்த், பி.ஆர்.நடராஜன் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆப்கானிஸ்தானில் மீண்டும் தூதரகம்: இந்தியா அறிவிப்பு

இருமல் மருந்து உயிரிழப்புகள்: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி -உச்சநீதிமன்றம்

ஆப்கானிஸ்தான் எப்போதும் இந்தியா பக்கம் உள்ளது: பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சா்

தமிழகம் முழுவதும் 809 மையங்களில் நாளை முதுநிலை ஆசிரியா் தோ்வு: 1,996 இடங்களுக்கு 2.36 லட்சம் போ் போட்டி

தமிழகத்தில் 9.50 லட்சம் யூனிட் ரத்தம் தானம் பெறப்பட்டது: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

SCROLL FOR NEXT