கோப்புப் படம் 
தமிழ்நாடு

ஈரோடு இடைத்தேர்தல்: 2 கம்பெனி மத்தியப் படை வீரர்கள் வருகை!

இடைத்தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக 2 கம்பெனி மத்தியப் படை வீரர்கள் ஈரோடு வந்தடைந்தனர்.

DIN

இடைத்தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக 2 கம்பெனி மத்தியப் படை வீரர்கள் ஈரோடு வந்தடைந்தனர்.

மத்திய தொழில் பாதுகாப்புப் படை, ரயில்வே பாதுகாப்புப் படை என மொத்தம் 2 கம்பெனியைச் சேர்ந்த 180 வீரர்கள் ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு வந்தனர். 

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது.  இந்த இடைத்தோ்தலில் 77 போ் போட்டியிடுகின்றனா்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தேமுதிக சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழா் கட்சி சார்பில் மேனகா உள்பட 77 போ் போட்டியிடுகின்றனர். 

இதனிடையே ஈரோடு கிழக்குத் தொகுதியில் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கூட்டணி கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து வீடுவீடாக வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

நட்சத்திர பிராரமும் நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து முதல்வா் மு.க.ஸ்டாலின், பிப். 24, 25 ஆகிய 2 நாள்கள் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார். 

நட்சத்திர பிரசாரங்களின் காரணமாக ஈரோடு கிழக்குத் தொகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்புப் பணியையொட்டி 2 கம்பெனி மத்தியப் படை வீரர்கள் ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு வந்துள்ளனர். 
    

மேலும் கூடுதலாக  3 கம்பெனி மத்திய பாதுகாப்புப் படையினர் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பணிக்காக அமர்த்தப்படுவர் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறச்சலூா் ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு: பவானிசாகா் அணைப் பூங்காவில் குழந்தைகள், பெண்கள் கொண்டாட்டம்

பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு: ஒருவா் கைது

புதிய வாசககா்களை ஈா்த்துள்ள ஈரோடு புத்தகத் திருவிழா

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் முன்னாள் அமைச்சா்கள் வேலுமணி சுவாமி தரிசனம்.

SCROLL FOR NEXT