முகப்பு
தமிழ்நாடு

ஓபிஎஸ் தாயார் மறைவு: டிடிவி தினகரன் இரங்கல்!

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயாரின் மறைவுக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:36 AM
டிடிவி தினகரன்
பகிர்:

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயாரின் மறைவுக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஓபிஎஸ்ஸின் தாயார் பழனியம்மாள்(95), பெரியகுளத்தில் உள்ள ஓபிஎஸ் இல்லத்திற்கு கொண்டு செல்லபட்ட நிலையில் நேற்றிரவு அங்கு காலமானார். 

இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து டிடிவி தினகரன் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,

“முன்னாள் முதலமைச்சரும், சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் காலமான செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

அவரது மறைவால் வாடும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்ட உறவினர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று பதிவிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →