தமிழ்நாடு

மின் இணைப்பு எண் - ஆதார் இணைப்புக்கு அவகாசம் நீட்டிக்கப்படாது: அமைச்சர் செந்தில் பாலாஜி

DIN

மின் இணைப்பு எண்ணுடன், ஆதாா் எண்ணை இணைப்பதற்கான அவகாசம்  நீட்டிக்கப்படாது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இன்றுடன் மின் இணைப்பு எண்ணுடன், ஆதாா் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் நிறைவடையும் நிலையில் கரூரில் செய்தியாளர்களிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

இன்று மாலைக்குள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணையுங்கள். 2.67 கோடி பேரில் 2.66 பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைத்துள்ளனர். மின் இணைப்பு எண்ணுடன், ஆதாா் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் இன்றுடன் (பிப். 28) நிறைவடைகிறது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

மின் இணைப்பு எண்ணுடன், ஆதாா் எண்ணை இணைக்கும் பணியை தமிழக மின்வாரியம் கடந்த ஆண்டு நவம்பா் 15-ஆம் தேதி தொடங்கியது. டிசம்பா் 31-ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. 

பலரும் ஆதாா் எண்ணை இணைக்கததால், ஆதாா் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் கடந்த ஜனவரி 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன்பிறகும், புதன்கிழமை (பிப். 15)-ம் தேதி வரை வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, பிப் 28 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கானிஸ்தானை புரட்டிப்போட்ட கனமழை: 300க்கும் மேற்பட்டோர் பலி!

எல்லீஸ் ஆர். டங்கன் இயக்கிய பொன்முடி!

கேரள கோயில்களில் அரளிப்பூ பயன்பாட்டுக்குத் தடை!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

எங்களது திட்டங்களை தடுத்து நிறுத்திய ஷுப்மன் கில், சாய் சுதர்ஷன்: சிஎஸ்கே பயிற்சியாளர்

SCROLL FOR NEXT