முகப்பு
தமிழ்நாடு

ஆதரவு தருக... ஒரு நாள் முன்னதாக வெள்ளக்கோவில் வாரச்சந்தை!

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் வாரச்சந்தை ஒரு நாள் முன்னதாக சனிக்கிழமை நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:42 PM
பகிர்:

வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் வாரச்சந்தை ஒரு நாள் முன்னதாக சனிக்கிழமை நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளக்கோவில் நகராட்சி சார்பில் பழைய பேருந்து நிலையம் அருகில் ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை சந்தை நடைபெற்று வருகிறது. இதில் காய்கறிகள், பழங்கள், உணவுப் பொருள்கள், தின்பண்டங்கள் வியாபாரம் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வரும் ஜனவரி 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தைப்பொங்கல் நாளாக இருப்பதால், ஒரு நாள் முன்னதாக சனிக்கிழமை சந்தை நடைபெற உள்ளது. விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் ஆதரவு தருமாறு நகராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →