ஆதரவு தருக... ஒரு நாள் முன்னதாக வெள்ளக்கோவில் வாரச்சந்தை!
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் வாரச்சந்தை ஒரு நாள் முன்னதாக சனிக்கிழமை நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் வாரச்சந்தை ஒரு நாள் முன்னதாக சனிக்கிழமை நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளக்கோவில் நகராட்சி சார்பில் பழைய பேருந்து நிலையம் அருகில் ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை சந்தை நடைபெற்று வருகிறது. இதில் காய்கறிகள், பழங்கள், உணவுப் பொருள்கள், தின்பண்டங்கள் வியாபாரம் நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க: தங்கம் விலை நிலவரம்: சவரனுக்கு ரூ.48 உயர்வு!
Advertisement
Advertisement
இந்நிலையில், வரும் ஜனவரி 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தைப்பொங்கல் நாளாக இருப்பதால், ஒரு நாள் முன்னதாக சனிக்கிழமை சந்தை நடைபெற உள்ளது. விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் ஆதரவு தருமாறு நகராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.