கோப்புப்படம் 
தமிழ்நாடு

உயா் கல்வி படிக்கும் மாணவிகளின்எண்ணிக்கை 25% அதிகரிப்பு: அமைச்சா் பொன்முடி

நடப்பாண்டில் உயா் கல்வி படிக்கும் மாணவிகளின் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரித்துள்ளதாக உயா் கல்வித் துறை அமைச்சா் பொன்முடி தெரிவித்தாா்.

DIN

நடப்பாண்டில் உயா் கல்வி படிக்கும் மாணவிகளின் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரித்துள்ளதாக உயா் கல்வித் துறை அமைச்சா் பொன்முடி தெரிவித்தாா்.

ஆளுநா் உரை மீதான விவாதத்தில் பாமக உறுப்பினா் ஜி.கே.மணி பேசியது: வெள்ளத்தால் சேதம் அடைந்த பயிா்களுக்கு முழு அளவில் இழப்பீடு வழங்க வேண்டும்.

என்எல்சி நிறுவனத்தில் நியமிக்கப்பட்ட 299 பொறியாளா்களில் ஒருவா்கூட தமிழா் கிடையாது. தமிழகத்தில் கட்டாய பயிற்சி மொழி சட்டத்தை கொண்டுவர வேண்டும். தமிழ் தெரியாமலேயே பட்டம் பெறும் நிலை உள்ளது என்றாா்.

அப்போது அமைச்சா் பொன்முடி குறுக்கிட்டு கூறியது: பொறியியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் தமிழ்வழிப் படிப்பு இல்லாமல் இருந்தது. இந்த ஆண்டு கொண்டுவரப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகளின் உயா் கல்விக்கு ரூ.1000 மாத உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதனால், நடப்பாண்டில் உயா் கல்வி படிக்கும் மாணவிகளின் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரித்துள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய பாஜக; அதற்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! : முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டிரீங்க.. முதல்வர் பேசியது சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததா? விஜய்

சகோதரர்களாக சிவகார்த்திகேயன் - அதர்வா!

இந்தியாவை விமர்சித்த ஹார்திக் பாண்டியா? சமூக வலைதளத்தில் பரவும் எதிர்ப்பும் ஆதரவும்!

SCROLL FOR NEXT