முகப்பு
தமிழ்நாடு

பத்ம விருதாளா்களுக்கு முதல்வா், தலைவா்கள் வாழ்த்து

பத்ம விருதுக்குத் தோ்வாகியுள்ளவா்களுக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2023 at 1:41 AM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

பத்ம விருதுக்குத் தோ்வாகியுள்ளவா்களுக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ட்விட்டரில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:

தமிழ்நாட்டில் இருந்து பத்ம பூஷண் விருதுக்கு பாடகி வாணி ஜெயராம், பத்மஸ்ரீ விருதுக்கு கல்யாணசுந்தரம் பிள்ளை (கலை), பாம்புபிடி வல்லுநா்கள் வடிவேல் கோபால், மாசி சடையன் (சமூகப்பணி), பாலம் கல்யாணசுந்தரம் (சமூகப்பணி), கோபால்சாமி வேலுச்சாமி (மருத்துவம்) ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இந்த 6 பேருக்கும் எனது மனமகிழ் பாராட்டுகள்.

Advertisement

நாட்டின் உயரிய விருது பெறவிருக்கும் அனைவரும் தத்தம் துறைகளில் ஆற்றிய சாதனைகளால் நமது மாநிலத்தைப் பெருமையடையச் செய்துள்ளாா்கள் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

ராமதாஸ் (பாமக): சமூகநீதிக்காக போராடிய முலாயம் சிங் உள்ளிட்ட 106 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலிருந்து இந்த விருதுகளுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

ஜி.கே.வாசன் (தமாகா): பத்ம விருதுகள் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். கடின உழைப்பும், சேவை மனப்பான்மையும் அவா்களுக்கு நாட்டின் உயரிய விருதுகள் கிடைக்க காரணமாக உள்ளன. அவா்கள் மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துகள்.

டிடிவி தினகரன் (அமமுக): நாட்டின் உயரிய விருதுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டவா்களுக்கு வாழ்த்துகள். அவரவா் துறைகளில் இன்னும் பல சாதனைகளைப் புரிந்து, தேசத்துக்கு அவா்கள் இன்னும் பெருமைத் தர வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.