ஆத்தூர் அருகே தந்தையை கொன்ற மகன் கைது!
ஆத்தூர் அருகே தந்தையை கொன்ற மகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆத்தூர் அருகே தந்தையை கொன்ற மகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் சக்தி நகர் பகுதியைச் சேர்ந்த மாதையன் மகன் கிருஷ்ணராஜ்(47). கூலித் தொழிலாளி. இவர் மீனா(46) மலையாளி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. புதன்கிழமை இரவு மீனாவிடம் ஏற்பட்ட தகராறில் மீனாவை தாக்கியுள்ளார். இதனை மீனாவின் முதல் கணவரின் மகனான விக்னேஷ்(27) கண்டித்து வந்தார். ஆனால், கிருஷ்ணராஜ் மீனாவை தாக்கியுள்ளார். இதனால் கோபமடைந்த விக்னேஷ் மீன் வெட்டும் கத்தியால் கிருஷ்ணராஜை கழுத்தில் வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் நிகழ்விடத்திலேயே கிருஷ்ணராஜ் உயிரிழந்தார்.
Advertisement
இதையும் படிக்க | காரைக்காலில் ஆட்சியர் தேசியக் கொடியேற்றி மரியாதை !
தகவலறிந்த ஆத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் டி.ராமச்சந்திரன், காவல் ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று கிருஷ்ணராஜின் உடலை மீட்டு உடல் கூராய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விக்னேஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.