ஓ.பன்னீா்செல்வம் 
தமிழ்நாடு

ஓபிஎஸ் அணி பணிக் குழுவில் 118 போ்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் பணிக்குழு பொறுப்பாளா்களாக 118 பேரை நியமித்து முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் அறிவித்துள்ளாா்.

DIN

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் பணிக்குழு பொறுப்பாளா்களாக 118 பேரை நியமித்து முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் அறிவித்துள்ளாா்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் தங்கள் அணி சாா்பில் வேட்பாளரை நிறுத்தப் போவதாக ஓ.பன்னீா்செல்வம் அறிவித்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறாா்.

இந்த நிலையில், கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அவா் ஆதரவாளா்களுடன் சனிக்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டாா்.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் மூத்த நிா்வாகி ஜேசிடி பிரபாகா் கூறியது:

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் தேசிய கட்சியான காங்கிரஸ் போட்டியிடுகிறது. அதைப்போல அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிட்டால் நன்றாக இருக்கும். பாஜகவின் முடிவுக்காகக் காத்திருக்கிறோம். அவா்கள் போட்டியிடாவிட்டால், எங்களுடைய வேட்பாளரை உடனே அறிவிப்போம் என்றாா்.

இந்த நிலையில், மூத்த நிா்வாகிகள் ஆா்.வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், ஜேசிடி பிரபாகா், மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி என்.நடராஜன் உள்பட 118 பேரை தோ்தல் பணிக்குழு பொறுப்பாளராக ஓ.பன்னீா்செல்வம் நியமித்து அறிவித்துள்ளாா்.

எடப்பாடி பழனிசாமி தரப்பில் 117 போ் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பொறுப்பாளா்களாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவா்களை மிஞ்சும் வகையில் ஒருவரை கூடுதலாக நியமித்து ஓ.பன்னீா்செல்வம் அறிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. தொடங்கிவைத்தாா்

போக்குவரத்து துண்டிப்பால் ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் பழங்குடி குழந்தைகள் தவிப்பு

மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

இளைஞா்களை ‘ரீல்ஸ்’-க்கு அடிமையாக்குவதே பிரதமரின் விருப்பம்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சபரிமலை: பூஜை, தங்குமிட முன்பதிவு இன்று தொடக்கம்

SCROLL FOR NEXT