மேட்டூர் அணை நீர்வரத்து 233 கனஅடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணை நீர்வரத்து 233 கனஅடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணை நீர்வரத்து 233 கனஅடியாக அதிகரித்துள்ளது.
காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று காலை வினாடிக்கு 117 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து இன்று காலை 223 கனஅடியாக சற்று அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 88.58 அடியிலிருந்து 87.65 அடியாக குறைந்துள்ளது.
நாளொன்றுக்கு மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரு அடி குறைந்து வருகிறது. அணையின் நீர் இருப்பு 50 டி.எம்.சியாக உள்ளது.