தமிழ்நாடு

மனைவி கட்டையால் தாக்கியதில் கணவன் பலி!

DIN

வாலாஜா அருகே குடிபோதையில் மனைவியிடம் தகராறு ஈடுபட்டதால், மனைவி கட்டையால் தாக்கியதில் கணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அருகே உள்ள வி.சி.மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (40). இவரது மனைவி பானுமதி (34), இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். 

இவர்களுக்கு திருமணம் ஆகி 14 ஆண்டுகள் ஆன நிலையில், தேவராஜ் தொடர்ந்து  குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் சண்டை போட்டுக்கொண்டு பானுமதி தனது தாய் வீடான சின்னதகர குப்பத்தில் இருந்து வந்துள்ளார். 

அங்கு வந்த தேவராஜ் குடித்துவிட்டு திங்கள்கிழமை இரவு தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பானுமதி, தனது கனவர் தேவராஜை கட்டையால் அடித்ததில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இச்சம்பவம் குறித்து வாலாஜா காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமுதாய நல்லிணக்கமும் ஆர்.எஸ்.எஸ்.ஸும்

கலை, அறிவியல் படிப்புகளுக்குத் திரும்பும் மாணவா்களின் கவனம்!

கட்டணம் கேட்ட சுங்கச்சாவடி பெண் ஊழியரை இடித்துச் சென்ற கார்!

வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமா் மோடி இன்று வேட்புமனு தாக்கல்

இன்று காலை 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

SCROLL FOR NEXT