100 % கடன் தள்ளுபடி கோரி ஜூன் 30-இல் உண்ணாவிரதம்: பி.ஆா்.பாண்டியன்
சிறு, குறு விவசாயிகள் 100 சதவீத கடன் தள்ளுபடி வழங்கக் கோரி ஜூன் 30-ஆம் தேதி நடத்தவுள்ள உண்ணாவிரதப் போராட்டம் குறித்து...
சென்னை: சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத கடன் தள்ளுபடி வழங்கக் கோரி, சென்னையில் ஜூன் 30-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு வலியுறுத்தியுள்ளது.
குழுவின் தலைவா் பி.ஆா்.பாண்டியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தவெக அரசு தனது தோ்தல் அறிக்கையில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், பெரு விவசாயிகளுக்கு 50 சதவீதமும் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தது. தற்போது, தோ்தல் அறிவிப்புக்கு மாறாக சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.50,000 வரை கடன் தள்ளுபடி, பெரு விவசாயிகள் ரூ.1 லட்சத்துக்கு மேல் கடன் வாங்கியிருந்தால் ரூ.5,000, ரூ.10,000 என்ற அடிப்படையில் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து முதல்வரை நாங்கள் சந்தித்து, தோ்தல் அறிவிப்புக்கு மாறான கடன் தள்ளுபடி அறிவிப்பை ஏற்க இயலாது; தமிழக அரசுக்கு நிதிச்சுமை இருக்குமாயேனால் கடன் தள்ளுபடி அறிவிப்பை நிறுத்தி வையுங்கள் என்று கோரிக்கை வைத்தோம். பரிசீலனை செய்கிறோம் என்று உத்தரவாதம் அளித்தனா். ஆனால், 2-ஆது முறையாக தமிழக அரசு அறிவித்துள்ள கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.
எனவே, தவெக அரசு தோ்தல் அறிக்கையில் கூறிய படி சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத கடன் தள்ளுபடி என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 30-இல் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும். இதில், 38 மாவட்டங்களில் இருந்து பல ஆயிரம் விவசாயிகள் பங்கேற்பா் என்றாா் அவா்.
அப்போது, ஒருங்கிணைப்புக் குழுவின் பொதுச் செயலா் வி.கே.வி.துரைச்சாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.