குதிரை பேரம்: தவெக அரசுக்கு எதிரான மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
தவெக அரசு குதிரை பேர அரசியலில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகார் குறித்து...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக அரசு குதிரை பேர அரசியலில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகார் இன்று விசாரணைக்கு வருகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களை வென்ற தவெக, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், ஆட்சியமைப்பதற்கு 118 இடங்கள் தேவைப்படும் என்பதால், தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனையடுத்து, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் மற்றும் அதிமுகவில் இருந்த ஒரு பிரிவினரின் ஆதரவு என 144 வாக்குகளைப் பெற்று தவெக அரசு அமைந்தது.
Advertisement
Advertisement
இந்த நிலையில்தான், ஆட்சியமைப்பதற்காக தவெக குதிரை பேர அரசியலில் ஈடுபட்டதாகக் கூறி, மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் ரிட் மனு தாக்கல் செய்தார்.
மனுவில் அவர் கூறியதாவது, வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்காக அரசியல் கட்சிகளிடையே சுமார் ரூ. 1,000 கோடி அளவுக்கு குதிரை பேரம் நடந்ததாகப் புகார்கள் எழுந்திருப்பதாகவும், இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக் கோரியும் கூறியிருந்தார்.
அதுமட்டுமின்றி, விசாரணை முடியும்வரையில் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தவும் கே.கே. ரமேஷ் கோரியிருந்தார்.
இந்த நிலையில், தவெக அரசு மீதான இந்தப் புகார் மனு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி வி. மோகனா அமர்வில் இன்று (ஜூன் 19) விசாரணைக்கு வருகிறது.