முகப்பு
தமிழ்நாடு

தேசியவாத காங்கிரஸுக்கு 100% ஆதரவு!

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சரத் பவாரை நேரில் சென்று சந்தித்தார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:17 PM
பகிர்:


தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 100 சதவிகிதம் காங்கிரஸ் கட்சி துணை நிற்கும் என்பது உறுதியாகியுள்ளதாக அக்கட்சியின் தலைவர் சோனியா தெரிவித்துள்ளார். 

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரை, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேரில் சென்று சந்தித்தார். 

இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா டூஹான், சரத் பவாருக்கு தனது முழு ஆதரவையும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.  

தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 100 சதவிகிதம் காங்கிரஸ் துணை நிற்கும் என சரத் பவாரிடம் ராகுல் உறுதியளித்தார். மேலும் எதிர்க்கட்சிகளின் ஆதரவும் தேசியவாத காங்கிரஸுக்கே உள்ளது என நம்பிக்கையளித்ததாக சோனியா குறிப்பிட்டார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.