தமிழ்நாடு

சென்னை-பெங்களூரு விரைவு ரயிலில் புகை!

DIN

வேலூர் அருகே சென்னை - பெங்களூரு விரைவு ரயில் என்ஜினிலில் வெளியான புகை‌ காரணமாக ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டது. அரை மணிநேரத்துக்கு பிறகு ரயில் புறப்பட்டுச் சென்றது.

சென்னையிலிருந்து பெங்களூரு நோக்கிச் செல்லும் டபுள் டக்கர் விரைவு ரயில் காட்பாடியை அடுத்து விண்ணமங்கலம் பகுதியில் சென்றபோது ரயில் என்ஜினிலிருந்து திடீரென பெருமளவில் புகை வெளியானது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டது. பின்னர், புகை வந்த இடத்தில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பிரேக் பழுது காரணமாக புகை வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அப்பகுதி சரிசெய்யப்பட்டு சுமார் அரை மணி நேரத்துக்குப் பிறகு ரயில் புறப்பட்டுச் சென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

SCROLL FOR NEXT