தமிழ்நாடு

சென்னை-பெங்களூரு விரைவு ரயிலில் புகை!

வேலூர் அருகே சென்னை - பெங்களூரு விரைவு ரயில் என்ஜினிலில் வெளியான புகை‌ காரணமாக ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டது. அரை மணிநேரத்துக்கு பிறகு ரயில் புறப்பட்டுச் சென்றது.

DIN

வேலூர் அருகே சென்னை - பெங்களூரு விரைவு ரயில் என்ஜினிலில் வெளியான புகை‌ காரணமாக ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டது. அரை மணிநேரத்துக்கு பிறகு ரயில் புறப்பட்டுச் சென்றது.

சென்னையிலிருந்து பெங்களூரு நோக்கிச் செல்லும் டபுள் டக்கர் விரைவு ரயில் காட்பாடியை அடுத்து விண்ணமங்கலம் பகுதியில் சென்றபோது ரயில் என்ஜினிலிருந்து திடீரென பெருமளவில் புகை வெளியானது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டது. பின்னர், புகை வந்த இடத்தில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பிரேக் பழுது காரணமாக புகை வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அப்பகுதி சரிசெய்யப்பட்டு சுமார் அரை மணி நேரத்துக்குப் பிறகு ரயில் புறப்பட்டுச் சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT