சிதம்பரத்தில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு சீல் 
தமிழ்நாடு

சிதம்பரத்தில் 14 ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு சீல்!

சிதம்பரத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 14 வீடுகளை பூட்டி இந்து அறநிலையத்துறையினர் சீல் வைத்தனர்.

DIN

சிதம்பரம்: சிதம்பரத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 14 வீடுகளை பூட்டி இந்து அறநிலையத்துறையினர் சீல் வைத்தனர்.

சிதம்பரம் வேங்கான் தெருவில் உள்ள குரு நமச்சிவாயர் மடத்தில் உள்ள யோகாம்பாள் சமேத ஆத்மநாதர் மற்றும் மாணிக்கவாசகர் ஆலய வளாகத்தில் 22-க்கும் மேற்பட்ட வீடுகள் ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டு உள்ளது.

இது வழிபாட்டுக்கு இடையூறாக இருப்பதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் பக்தர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.

ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 14 வீடுகளை பூட்டி சீல் வைக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஏற்கெனவே உத்தரவு வெளியான நிலையில் பல மாதங்களுக்கு பிறகு புதன்கிழமை சீல் வைக்கும் பணி தொடங்கியது.

இந்து சமய அறநிலையத்துறையின் கடலூர் மாவட்ட உதவி ஆணையர் சந்திரன் தலைமையில் 4 செயல் அலுவலர்கள் ஆகியோர் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புடன் 14 வீடுகளை பூட்டி சீல் வைக்கும் பணி தொடங்கி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"அண்ணா எனும் பசுமாடு..! DMK எனும் காக்கா..!" அண்ணாமலை

சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் மறியல் போராட்டம்! அரசு ஊழியர்களாக அறிவிக்க கோரிக்கை!

”விஜய்யிடம் முதலில் என்ஜின் இருக்கா?” தவெகவை விமர்சித்த அண்ணாமலை

அண்ணாவின் நினைவுநாள்! எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை!

உச்ச நீதிமன்றத்தில் நாளை மமதா பானர்ஜி வாதிடுவார்!

SCROLL FOR NEXT