தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்ட கூலித் தொழிலாளியை மீட்ட காவல் துறையினர். 
தமிழ்நாடு

தஞ்சாவூர் ஆட்சியரக வளாகத்தில் கூலித் தொழிலாளி தற்கொலை முயற்சி!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் கூலித் தொழிலாளி குடும்ப பிரச்னை காரணமாக திங்கள்கிழமை தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

DIN

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் கூலித் தொழிலாளி குடும்ப பிரச்னை காரணமாக திங்கள்கிழமை தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டத்துக்கு உள்பட்ட விஸ்வநாதபுரம் பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்தவர் மேகராஜ் (32). கூலி தொழிலாளி. இவரது மனைவி குடும்ப பிரச்னை காரணமாக கோபித்துக் கொண்டு குழந்தையுடன் தந்தை வீட்டுக்குச் சென்றார். மனைவியை சமாதானம் செய்வதற்காக மேகராஜ் அண்மையில் அவரது வீட்டுக்குச் சென்றார். அங்கு மேகராஜை மனைவியின் பெற்றோர், உறவினர்கள் அடித்து விரட்டினர். 

இதுகுறித்து, நாச்சியார் கோவில் காவல் நிலையத்தில் மேகராஜ் புகார் செய்தார். இவரது புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் இவரை காவல் துறையினர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை முற்பகல் வந்த மேகராஜ் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்த காவல் துறையினர் விரைந்து வந்து மேகராஜை மீட்டு, அவர் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர், விசாரணை செய்வதற்காகத் தமிழ் பல்கலைக்கழகக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏற்றத்தில் வர்த்தகமாகும் பங்குச் சந்தை! இன்றைய நிலவரம் என்ன?

அம்பிகாவதியின் ஆன்மா சிதைந்துவிட்டது: தனுஷ்

VinFast நிறுவனத்தின் முதல் காரில் கையெழுத்திட்ட முதல்வர் Stalin

விவசாய நிதி 20வது தவணை விடுவிப்பு: கேஒய்சி பூர்த்தி செய்ய மோடி வலியுறுத்தல்!

விழுப்புரம்: ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ஏலத்தில் பங்கேற்ற வியாபாரிகள்

SCROLL FOR NEXT