தமிழ்நாடு

திருச்சி மாவட்ட ஆட்சியரகம் முன்பு குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டம்!

திருச்சியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட இடம் வழங்கிய பொது மக்களுக்கு குடியிருப்பில் வீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரகம் முன்பு குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டம்

DIN

திருச்சி: திருச்சியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட இடம் வழங்கிய பொது மக்களுக்கு குடியிருப்பில் வீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரகம் முன்பு குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.

திருச்சி கல்மந்தை பகுதியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் அடுக்குமாடி கட்டுவதற்காக 60 ஆண்டு காலம், மூன்று தலைமுறையாக குடியிருந்த வீடுகளை காலி செய்து இடம் கொடுத்தனர். அவ்வாறு  இடம் வழங்கிய பொதுமக்கள் பலருக்கும் இன்னும் வீடு ஒதுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. 

இந்த நிலையில் பாதிக்கப்பட்டமக்களுக்கு உடனடியாக வீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கல்மந்தையைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரகம் அருகே, குடும்பத்துடன் காத்திருக்கும் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்திற்கு கல்மந்தை கிளைச் செயலாளர் மகாலிங்கம் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பின் ரங்கராஜன், மலைக்கோட்டை பகுதி செயலாளர் லெனின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வீடு வழங்காவிட்டால் போராட்டம் தொடரும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவ. 25ல் திருப்பூரில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்! - இபிஎஸ் அறிவிப்பு

7 விக்கெட்டுகள் வீழ்த்தி மிட்செல் ஸ்டார்க் மிரட்டல்.! 172 ரன்களில் சரணடைந்த இங்கிலாந்து!

மன்னாா்குடியில் பேருந்து நிலைய வணிக வளாகத்தில் புதிய அரசு மகளிா் கல்லூரி தொடக்கம்: அதிருப்தியில் பெற்றோா், மாணவிகள்!

தமிழகத்தில் மிக கனமழை, அதி கனமழைக்கு வாய்ப்பில்லை!

தெய்வ தரிசனம்... பாவங்கள் நீங்கி இன்பமுடன் வாழ திருச்சுழியல் திருமேனிநாதர்!

SCROLL FOR NEXT