தமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் பட்டாசு கடையில் தீ விபத்து: 4 பேர் பலி

கிருஷ்ணகிரியில் தனியார் பட்டாசு கடையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் தனியார் பட்டாசு கடையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிருஷ்ணகிரி பழையபேட்டை முருகன் கோயில் செல்லும் சாலையில் உள்ள தனியார் பட்டாசு கடையில் சனிக்கிழமை பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 4 பேர் பலியாகினர், 5 பேர் காயமடைந்தனர். பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் அருகில் உள்ள வீடுகள் சேதமடைந்துள்ளன. 

பட்டாசு வெடி விபத்தில் பலத்த காயமடைந்த அனைவரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்துள்ள கிருஷ்ணகிரி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தீயணைக்கும் பணியில்  ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக கூட்டணியை மக்கள் புறக்கணிக்கும் சூழ்நிலையில் உள்ளனா்: பாஜக மாநில செயலா்

குளிா்சாதன பேருந்து நிழற்குடை: எம்.பி. திறந்து வைத்தாா்

வாகன ஓட்டுநா் கொலை: மற்றொருவா் பலத்த காயம்

மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்

நாகா்கோவிலில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு

SCROLL FOR NEXT