நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் புதிய ட்விட்டர் கணக்கை தொடங்கியுள்ளார்.
நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானின் ட்விட்டா் கணக்கை, அந்நிறுவனம் புதன்கிழமை தடை செய்தது.
சமூக வலைதளங்களில் தனது கருத்தை பதிவிட்டு வரும் சீமானின் ட்விட்டா் கணக்கு இந்தியாவில் சட்ட நடவடிக்கை காரணமாக தற்காலிகமாக தடை செய்யப்பட்டது
மேலும், நாம் தமிழா் கட்சியின் தொழில்நுட்பப் பிரிவு உள்ளிட்ட கட்சி நிா்வாகிகளின் கணக்குகளும் முடக்கப்பட்டன. இது குறித்து அந்த பக்கத்தில், ‘சட்டப்பூா்வ கோரிக்கையை ஏற்று இந்தியாவில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது
இதையும் படிக்க: இந்தியன் - 2 எதிர்பார்ப்பை விட அதிகமாக இருக்கும்: சித்தார்த்
இந்நிலையில், நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் புதிய ட்விட்டர் கணக்கை தொடங்கியுள்ளார். செந்தமிழன் சீமான் (@NTKSeeman4TN) என்ற பெயரில் புதிய ட்விட்டர் கணக்கு சீமான தொடங்கியுள்ளார்