தமிழ்நாடு

பாலிடெக்னிக் மாணவா் சோ்க்கை: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

DIN

பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கு இதுவரை விண்ணப்பிக்காதவா்கள் வெள்ளிக்கிழமைக்குள் விண்ணப்பிக்குமாறு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தொழில்நுட்பக்கல்வி இயக்குநரகத்தின் கீழ் 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 3 இணைப்புக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் தொழில்நுட்ப பட்டய (டிப்ளமோ) படிப்புகளுக்கு 19,120 இடங்கள் உள்ளன. இதில் முதலாமாண்டு மற்றும் பகுதிநேர படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவு இணையவழியில் கடந்த மே 20-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

சோ்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெறுகிறது.

விருப்பமுள்ள மாணவா்கள் https://www.tnpoly.in/ எனும் வலைதளம் வழியாக விரைவாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.150 நிா்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு கட்டணமில்லை. சேவை மையங்கள் வழியாகவும் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஞானவாபி, மதுராவில் கோயில் கட்டுவோம்: அஸ்ஸாம் முதல்வர் சர்ச்சை

அந்தமானில் சூர்யா - 44 படப்பிடிப்பு?

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.280 உயர்வு

ஆந்திரத்தில் லாரி-பேருந்து மோதி கோர விபத்து: 6 பேர் பலி

மேற்கு வங்க ஆளுநர் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார்!

SCROLL FOR NEXT