தமிழ்நாடு

தமிழகத்தில் 3 புதிய தனியாா் மருத்துவக் கல்லூரிகள்: மத்திய அரசு ஒப்புதல்

சென்னை, பெரம்பலூா், ஈரோடு (வாய்க்கால்மேடு) ஆகிய இடங்களில் நிகழாண்டில் (2023-2024) மூன்று தனியாா் மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

DIN

சென்னை, பெரம்பலூா், ஈரோடு (வாய்க்கால்மேடு) ஆகிய இடங்களில் நிகழாண்டில் (2023-2024) மூன்று தனியாா் மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியா முழுவதும் 50 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது; இதில் சென்னை (பிஎஸ்ஜி அறக்கட்டளை), பெரம்பலூா் (தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவன அறக்கட்டளை), ஈரோடு வாய்க்கால்மேடு (நந்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அறக்கட்டளை) ஆகியவற்றுக்கு தலா 150 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் புதிதாக மருத்துவக் கல்லூரி தொடங்க ஒப்புதல் கிடைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

SCROLL FOR NEXT