சென்னை: சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே ஜனா சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியதால் பரபரப்பு நிலவியது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் பயணிகளை இறக்கிவிட்டு பணிமனைக்கு சென்றபோது பேசின் பிரிட்ஜ் அருகே ஜனா சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து ரயில்வே அதிகாரிகள், ஊழியர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஊழியர்களின் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, ரயிலின் 2 சக்கரங்களும் நிலைக்கு கொண்டுவரப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ரயில் ஓட்டுநரின் நடவடிக்கையால் அதிர்ஷ்டவசமாக பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.