தமிழ்நாடு

கிண்டி பல்நோக்கு மருத்துவமனையை முதல்வா் திறந்துவைத்தார்!

சென்னை கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள ‘கலைஞா் நூற்றாண்டு நினைவு பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை’யை பொது மக்கள் பயன்பாட்டுக்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (ஜூன் 15) திறந்துவைத்தார்.

DIN

சென்னை கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள ‘கலைஞா் நூற்றாண்டு நினைவு பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை’யை பொது மக்கள் பயன்பாட்டுக்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 15) திறந்துவைத்தார்.

கிண்டியில் உள்ள கிங் ஆய்வக வளாகத்தில், ரூ.230 கோடி மதிப்பில் மொத்தம் 4.89 ஏக்கா் நிலப் பரப்பில் தரைதளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட 3 கட்டடங்கள் 51,429 சதுர மீட்டரில் புதிய பல்நோக்கு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

மேலும், 1000 படுக்கை வசதிகளுடன் கூடிய இந்த மருத்துவமனையில், மருத்துவ உபகரணங்களை நிறுவும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

இந்த மருத்துவமனையை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு திறந்து வைப்பதாக இருந்தது. இந்த நிலையில், அவரது தேதி உறுதி செய்யப்படாததால் முதல்வா் மு.க.ஸ்டாலின் கிண்டி மருத்துவமனையை இன்று திறந்து திறந்துவைத்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

SCROLL FOR NEXT