தமிழ்நாடு

சென்னை மழை பாதிப்பு: புகார் எண் அறிவிப்பு

DIN

சென்னை: மழை பாதிப்பு குறித்து புகார்களை தெரிவிக்க உதவி எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சில இடங்களில் நீர் தேங்கியுள்ளது.

மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளதால், பல்வேறு இடங்களில் நீர் தேக்கம் இல்லையென்றாலும், மெட்ரோ பணிகள் நடைபெறும் சில இடங்களிலும், தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கியுள்ளன.

மேலும், மழைநீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வரும் சூழலில், குடிநீர் வழங்கல், கழிவு நீர் அகற்றம் தொடர்பான புகார்களை தெரிவிக்க மாநகராட்சி நிர்வாகம் எண்களை அறிவித்துள்ளன.

மழைநீர் பாதிப்புகளுக்கு 1913, மழைநீர் அகற்ற 044 4567 4567, குடிநீர் வாரியத்தை தொடர்பு கொள்ள 1916 ஆகிய எண்களில் அழைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 08.05.2024

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

லக்னௌ டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

ரோஜா நிறக் காரிகை!

SCROLL FOR NEXT