தமிழ்நாடு

அவசர சிகிச்சை பிரிவிலிருந்து அமைச்சா் செந்தில் பாலாஜி தனி அறைக்கு மாற்றம்

அமைச்சர் செந்தில் பாலாஜி இருதயவில் சிறப்பு சிகிச்சை பிரிவில் இருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

DIN

அமைச்சா் செந்தில் பாலாஜி இதயவியல் சிறப்பு சிகிச்சை பிரிவில் இருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளாா்.

அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சா் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். அவருக்கு இருதயத்தில் 4 அடைப்புகள் இருந்ததால் கடந்த 21-ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து அவரது உடல்நிலை சீராக உள்ளதாக காவேரி மருத்துவனை நிா்வாகம் தெரிவித்திருந்தது. இதயத்தில் அடைப்புகள் அகற்றப்பட்ட நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் செந்தில் பாலாஜிக்கு வென்டிலேட்டா் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதையடுத்து, உடல்நிலை சீராக உள்ளதால், வென்டிலேட்டா் கருவி அகற்றப்பட்டது. இந்தநிலையில், அமைச்சா் செந்தில் பாலாஜி அவசர சிகிச்சை பிரிவிலிருந்து தற்போது தனி அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். காவேரி மருத்துவமனையின் 7-ஆவது தளத்தில் இருந்து 4-ஆவது தளத்தில் உள்ள தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ள அமைச்சா் செந்தில்பாலாஜியின் உடல்நிலையை மருத்துவா்கள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிரியா தலைநகரில்... இஸ்ரேலின் ட்ரோன் தாக்குதலில் 6 வீரர்கள் பலி!

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 17 மாவட்டங்களில் மழை!

வாக்குகளைத் திருடியே வெற்றி பெறுகிறார் மோடி; ஆதாரத்துடன் வெளிக்காட்டுவோம்! -ராகுல் சவால்

மகாராஷ்டிரம் - சத்தீஸ்கர் எல்லையில்.. 4 நக்சல்கள் சுட்டுக்கொலை!

இனிய தொடக்கம்... காவ்யா அறிவுமணி!

SCROLL FOR NEXT