முகப்பு
தமிழ்நாடு

சென்னை ஐஐடியில் மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை! 

சென்னை ஐஐடியில் ஆந்திரத்தைச் சேர்ந்த மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:44 AM
பகிர்:

சென்னை ஐஐடியில் ஆந்திரத்தைச் சேர்ந்த மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த சில வருடங்களாகவே ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. 

இந்நிலையில், ஆந்திராவைச் சேர்ந்த மாணவர் புஷ்பக். இவர் சென்னை ஐஐடியில் பி.டெக் மூன்றாமாண்டு விடுதியில் தங்கிப் படித்து வந்தார். இந்நிலையில், மாணவர் திடீரென விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இதுதொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றார். 

முன்னதாக, அதே ஐஐடி சென்னையில் 24 வயது மாணவர் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், அதே சம்பவம் மீண்டும் நிகழ்ந்துள்ளது. இது ஐஐடியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.