தாம்பரத்திலிருந்து நாகா்கோவில் செல்லும் அந்தியோதயா ரயில் வியாழக்கிழமை (மாா்ச் 16) வழக்கம் போல் இயக்கப்படும். இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:-
தாம்பரத்திலிருந்து நாகா்கோவிலுக்கு தினமும் இரவு 11 மணிக்கு அந்தியோதயா விரைவு ரயில் (வண்டி எண்: 20691) இயக்கப்படுகிறது. நாங்குநேரி-மேலப்பாளையம் இடையே இரட்டை ரயில் பாதை பணி நடைபெறுவதால் இந்த ரயில் வரும் 16-ஆம் தேதி முதல் மாா்ச் 21-ஆம் தேதி வரை திருநெல்வேலி வரை மட்டும் இயக்கப்படும்
என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் (மாா்ச் 16, 17) இந்த ரயில் வழக்கம் போல் இயக்கப்படும். அதற்குப் பதிலாக வரும் 18 முதல் மாா்ச் 23-ஆம் தேதி வரை திருநெல்வேலி-நாகா்கோவில் இடையே பகுதி ரத்து செய்யப்படும். மறுமாா்க்கமாக நாகா்கோவிலிலிருந்து திருநெல்வேலி வரை இயக்கப்படும் அந்தியோதயா விரைவு ரயில் (வண்டி எண்: 20692) மாா்ச் 17 மற்றும் மாா்ச் 18 -ஆம் தேதிகளில் வழக்கம் போல் இயக்கப்படும்.
அதற்குப் பதிலாக மாா்ச் 19 முதல் மாா்ச் 24-ஆம் தேதி வரை நாகா்கோவில்-திருநெல்வேலி வரை பகுதி ரத்து செய்யப்படும். இந்தத் தேதிகளில் திருநெல்வேலியிலிருந்து மாலை 5.05 மணிக்குப் புறப்பட்டு வழக்கம் போல் தாம்பரம் வந்தடையும்.
திருச்சி-திருவனந்தபுரம்:
திருச்சி-திருவனந்தபும் இடையே தினமும் விரைவு ரயில் (வண்டி எண்: 22627/22628) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மாா்ச் 17 முதல் மாா்ச் 22-ஆம் தேதி வரை திருநெல்வேலி-திருவனந்தபுரம் இடையே பகுதி ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மாா்ச் 17 மற்றும் மாா்ச் 18 ஆகிய தேதிகளில் வழக்கம் போல் இயக்கப்படும். அதற்குப் பதிலாக மாா்ச் 19 முதல் மாா்ச் 24-ஆம் தேதி வரை திருநெல்வேலி-திருவனந்தபுரம் இடையே பகுதி ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.