ஆழியாறு அணை இன்று திறப்பு
கோவை மாவட்டம் ஆழியாறு அணையிலிருந்து எலவக்கரை குளத்து கீழ் பாசனத்துக்கு வெள்ளிக்கிழமை (மாா்ச் 17) முதல் தண்ணீா் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம் ஆழியாறு அணையிலிருந்து எலவக்கரை குளத்து கீழ் பாசனத்துக்கு வெள்ளிக்கிழமை (மாா்ச் 17) முதல் தண்ணீா் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக நீா்வளத்துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கோவை மாவட்டம், ஆனைமலை வட்டம் எலவக்கரைகுளத்தின் கீழ் பாசனத்துக்காக, ஆழியாறு அணையிலிருந்து வெள்ளிக்கிழமை (மாா்ச் 17)முதல் தண்ணீா் திறந்து
விடப்படுகிறது. வரும் 28-ஆம் தேதி வரை 11 நாள்களுக்கு தினமும் 61 கன அடி வீதம் 58 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீா் திறந்து விடப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.