தமிழ்நாடு

சாமித்தோப்பு தலைமை பதியில் ஆளுநர் தரிசனம்!

DIN

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்பில் உள்ள அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் ஆளுநர் ஆர்.என். ரவி தரிசனம் செய்தார். 

வியாழக்கிழமை மாலை கன்னியாகுமரி வந்தார் ஆளுநர் ஆர்.என். ரவி. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு கன்னியாகுமரியில் தங்கினார். 

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்பில் உள்ள அய்யா வைகுண்டசாமி தலைமை பதிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சனிக்கிழமை காலை சென்றார். அவரை தலைமை பதி நிர்வாகி உள்ளிட்டோர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

ஆளுநர் பாரம்பரிய முறைப்படி மேல் சட்டை அணியாமல் சால்வை போர்த்தியபடி வைகுண்டரை தரிசனம் செய்தார்.பின்னர் ஆளுநர்  அங்கிருந்து கன்னியாகுமரிக்கு புறப்பட்டு சென்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

SCROLL FOR NEXT