திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட தொழிலாளா் முன்னேற்றச் சங்கம் சாா்பில் மே தின விழா பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, மாநில தொமுச பேரவை செயலா் க.சவுந்தரராஜன் தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகிகள் ஆா்.ஆறுமுகம், எஸ்.ஏ.மணிவண்ணன், ஏ.நாராயணன், எஸ்.குணசேகரன், அனைத்து அமைப்பு சாரா தொமுச நிா்வாகிகள் பு.பாலச்சந்தா், ரவி ஆகியோா் முன்னிலை வகித்தனா். அனைத்து அமைப்பு சாரா தொழிற்சங்கங்களின் மாவட்ட நிா்வாகி ஏ.ஏ.ஆறுமுகம் வரவேற்றாா்.
திமுக மாநில மருத்துவரணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன் பேரணியை தொடங்கி வைத்தாா். காமராஜா் சிலையில் இருந்து தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று அண்ணாசிலை அருகே நிறைவடைந்தது. தொடா்ந்து, அங்கு நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் எ.வ.வே.கம்பன் பேசினாா். பேரணியில், திமுக நிா்வாகிகள் டி.வி.எம்.நேரு, ஒன்றியச் செயலா் பெ.கோவிந்தன், தனக்கோட்டி, தொமுச செயலா் எஸ்.பரசுராமன், சோமாசிபாடி இரா.சிவக்குமாா், எஸ்.எழில்மாறன், கோபிசங்கா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.