முகப்பு
தமிழ்நாடு

சென்னை - பெங்களூரு டபுள் டெக்கர் ரயில் தடம் புரண்டது!

சென்னையில் இருந்து பெங்களூரு சென்ற டபுள் டெக்கர் ரயில் குப்பம் அருகே தடம் புரண்ட நிலையில், மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Updated On : 15 மே 2023, 1:35 pm IST
பகிர்:

சென்னையில் இருந்து பெங்களூரு சென்ற டபுள் டெக்கர் ரயில் குப்பம் அருகே தடம் புரண்ட நிலையில், மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 7.25 மணிக்கு டபுள் டெக்கர் ரயில்(22625) பெங்களூரு கேஎஸ்ஆர் ரயில் நிலையம் புறப்பட்டுச் சென்றது.

இந்நிலையில், குப்பம் ரயில் நிலையத்தை கடந்து காலை 11.15 மணியளவில் பங்காருபேட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது தண்டவாளத்தில் இருந்து ரயிலின் பெட்டி புரண்டதை தொடர்ந்து உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

பெங்களுரு ரயில் தடம்புரண்டுள்ள நிலையில், அவ்வழியாகச் செல்லும் ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments