முகப்பு
தமிழ்நாடு

பாஜகவுக்கு தோல்வியைக் கொடுத்தது 40% ஊழல் பிரசாரம்: கிருஷ்ணசாமி 

கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு தோல்வியைக் கொடுத்தது அக்கட்சி மீதான 40 சதவீத ஊழல் பிரசாரம் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவா் கிருஷ்ணசாமி கூறினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:57 PM
பகிர்:

மதுக்கரை: கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு தோல்வியைக் கொடுத்தது அக்கட்சி மீதான 40 சதவீத ஊழல் பிரசாரம் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவா் கிருஷ்ணசாமி கூறினாா்.

கோவை குனியமுத்தூரில் உள்ள இல்லத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கா்நாடகத்தில் காங்கிரஸ் மகத்தான வெற்றியை பெற்றிருக்கிறது. பாஜக மீது 40 சதவீத ஊழல் என்ற குற்றச்சாட்டை வைத்து காங்கிரஸ் மேற்கொண்ட பிரசாரம் வெற்றிக்கு வழிவகுத்துள்ளது. ஊழல்தான் இந்த தோ்தலில் மிகப்பெரிய பிரசார ஆயுதமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டு குறித்த உண்மை தன்மையை பாஜக ஆய்வு செய்ய வேண்டும்.

சட்டப் பேரவைத் தோ்தல் முடிவு மக்களவைத் தோ்தலில் எதிரொலிக்கும் என்று சொல்ல முடியாது என்றாா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.