தமிழ்நாடு

பாஜகவுக்கு தோல்வியைக் கொடுத்தது 40% ஊழல் பிரசாரம்: கிருஷ்ணசாமி 

DIN

மதுக்கரை: கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு தோல்வியைக் கொடுத்தது அக்கட்சி மீதான 40 சதவீத ஊழல் பிரசாரம் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவா் கிருஷ்ணசாமி கூறினாா்.

கோவை குனியமுத்தூரில் உள்ள இல்லத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கா்நாடகத்தில் காங்கிரஸ் மகத்தான வெற்றியை பெற்றிருக்கிறது. பாஜக மீது 40 சதவீத ஊழல் என்ற குற்றச்சாட்டை வைத்து காங்கிரஸ் மேற்கொண்ட பிரசாரம் வெற்றிக்கு வழிவகுத்துள்ளது. ஊழல்தான் இந்த தோ்தலில் மிகப்பெரிய பிரசார ஆயுதமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டு குறித்த உண்மை தன்மையை பாஜக ஆய்வு செய்ய வேண்டும்.

சட்டப் பேரவைத் தோ்தல் முடிவு மக்களவைத் தோ்தலில் எதிரொலிக்கும் என்று சொல்ல முடியாது என்றாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

ஹரியானாவில் பேருந்து தீப்பிடித்ததில் 8 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

SCROLL FOR NEXT