கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாணவி உயிரிழந்த வழக்கில், 1200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி காவல்துறையினர் தாக்கல் செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியாா் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி, பள்ளி வளாகத்தில் கடந்தாண்டு ஜூலை 13-ஆம் தேதி சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த மரணம் தொடா்பாக அப்பள்ளியின் தாளாளா் ரவிகுமாா், செயலா் சாந்தி, முதல்வா் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்ரியா, கணித ஆசிரியை கிருத்திகா ஆகிய 5 பேரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்திருந்தனர்.
இந்நிலையில், கடந்த 9 மாதங்களாக விசாரணை செய்து வந்த சிபிசிஐடி காவல்துறையினர் 1,200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை விழுப்புரம் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தனர்.