கோப்புப்படம் 
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் 2-4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும்!

தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாள்களுக்கு 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

DIN

தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாள்களுக்கு 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 5 நாள்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

வெப்பநிலை: 

மே 16, 17, 18 ஆகிய மூன்று நாள்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும். 

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கும். 

மீனவர்களுக்காக எச்சரிக்கை: 

மே 16, 17ல் தெற்கு அரபிக்கடலில் மத்திய பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிமீ வேகத்திலும் இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருகரு கண்களால்... ராஜி எப்படி? ஷாலினி!

DMK-வின் DNA எனக்குத் தெரியும்! - Aadhav Arjuna | Vijay | TVK Special General Committee meeting

உன்னதமானது... ஸ்ரீலீலா!

பாரிஸ் நகர் வீதியிலே... கிமாயா கபூர்!

ஆழிக்கருகில் அன்பின் வெளிப்பாடு... ஸ்வாசிகா!

SCROLL FOR NEXT