கோப்புப்படம் 
தமிழ்நாடு

கலை, அறிவியல் கல்லூரிகளில் 1,07,395 இடங்களுக்கு 2.99 லட்சம் பேர் போட்டி

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு திங்கள்கிழமையுடன் நிறைவடைந்தது.

DIN

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு திங்கள்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், மொத்தமுள்ள 1 லட்சத்து 7 ஆயிரத்து 395 இடங்களுக்கு, 2 லட்சத்து 99 ஆயிரத்து 558 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழகத்தில் கல்லூரி கல்வி இயக்குநகரத்தின் கீழ்164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த 8-ஆம் தேதி முதல் தொடங்கி திங்கள்கிழமை நிறைவுபெற்றது.

இந்த நிலையில், 1 லட்சத்து 15 ஆயிரத்து 752 மாணவர்கள், 1 லட்சத்து 28 ஆயிரத்து 274 மாணவிகள், மூன்றாம் பாலினத்தவர் 78 பேர் என மொத்தம் 2 லட்சத்து 99 ஆயிரத்து 558 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 2 லட்சத்து 44 ஆயிரத்து 104 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |

டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து

த.வெ.க.வில் இணைந்த முன்னாள் பேரவைத் தலைவர் மகன்!

தாய் கிழவி இரண்டாவது பாடல்!

5 ஆண்டுகால திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை: இபிஎஸ் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT