தமிழ்நாடு

கலை, அறிவியல் கல்லூரிகளில் 1,07,395 இடங்களுக்கு 2.99 லட்சம் பேர் போட்டி

DIN

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு திங்கள்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், மொத்தமுள்ள 1 லட்சத்து 7 ஆயிரத்து 395 இடங்களுக்கு, 2 லட்சத்து 99 ஆயிரத்து 558 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழகத்தில் கல்லூரி கல்வி இயக்குநகரத்தின் கீழ்164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த 8-ஆம் தேதி முதல் தொடங்கி திங்கள்கிழமை நிறைவுபெற்றது.

இந்த நிலையில், 1 லட்சத்து 15 ஆயிரத்து 752 மாணவர்கள், 1 லட்சத்து 28 ஆயிரத்து 274 மாணவிகள், மூன்றாம் பாலினத்தவர் 78 பேர் என மொத்தம் 2 லட்சத்து 99 ஆயிரத்து 558 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 2 லட்சத்து 44 ஆயிரத்து 104 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆட்சியில் 10 ஆண்டுகளாக பாகுபாடு: அகிலேஷ்

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மே 24 வரை விண்ணப்பிக்கலாம்

தாமதமானாலும் வாக்கு செலுத்தாமல் வீடு திரும்பாதீர்கள்: உத்தவ் தாக்கரே கோரிக்கை

மம்தா பானர்ஜியின் சகோதரர் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை!

5-ஆம் கட்ட தேர்தல்: ஜனநாயகக் கடமையாற்றிய சாமானிய மக்கள்!

SCROLL FOR NEXT