தமிழ்நாடு

அரசுப் பேருந்துகளில் 5 வயது வரை கட்டணமில்லை: அரசாணை வெளியீடு

DIN

அரசுப் பேருந்துகளில் 5 வயது வரை குழந்தைகளுக்கு கட்டணமில்லை என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக போக்குவரத்து கழகங்களால் இயக்கப்படும் அனைத்து விதமான பேருந்துகளிலும் 5 வயது வரையிலான குழந்தைகள் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என்று தமிழக சட்டப்பேரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், அரசுப் பேருந்துகளில் 5 வயது வரை குழந்தைகளுக்கு கட்டணமில்லை என்ற அறிவிப்பை அமல்படுத்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், 5 வயதுக்கு மேல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு பேருந்துகளில் அரை டிக்கெட் எடுத்து பயணம் மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு மட்டுமே பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காந்தாரி.. ஈஷா ரெப்பா!

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

SCROLL FOR NEXT