தமிழ்நாடு

கோவையில் ஆலங்கட்டி மழை:  குழந்தைகள், பெரியவர்கள் மகிழ்ச்சி

வெப்பச் சலனம் காரணமாக கோவை மாவட்டத்தில் கடந்த மூன்று நாள்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

DIN

கோவை: வெப்பச் சலனம் காரணமாக கோவை மாவட்டத்தில் கடந்த மூன்று நாள்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

நேற்றைய தினம் சூலூர் பகுதியில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மதியத்திற்கு மேல் பரவலாக மழை பெய்து வருகிறது. 

குறிப்பாக அவிநாசி சாலை, ரயில் நிலையம், பூ மார்க்கெட், உக்கடம், இடையர் பாளையம் ஆகிய மாநகர பகுதிகளிலும் கணுவாய், தடாகம் சோமையம்பாளையம், ஆகிய புறநகர் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. 

இந்நிலையில் இடையர்பாளையம், கோவில்மேடு, டிவிஎஸ் நகர் ஆகிய பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது.  இதனால் அப்பகுதியில் உள்ள குழந்தைகள், பெரியவர்கள் அனைவரும் உற்சாகமடைந்தனர்.  காலையிலிருந்து வெயில்  வாட்டி வந்த நிலையில் தற்போது பெய்து வரும் ஆலங்கட்டி மழையின் காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

SCROLL FOR NEXT