ஐபிஎல் கோப்பையை ஐந்தாவது முறையாக வென்றுள்ள சிஎஸ்கே-வின் மஞ்சள் படைக்கு வாழ்த்துகள் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.
முதல்வா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ட்விட்டா் பதிவு: ஒவ்வொரு சூழலுக்கும் ஏற்ப திட்டம் வகுத்து செயல்பட்ட எம்.எஸ்.தோனி தலைமையில், 5-ஆவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள சிஎஸ்கேவின் மஞ்சள் படைக்கு வாழ்த்துகள்.
இது மிகச் சிறந்த கிரிக்கெட் போட்டியாகும். நெருக்கடியான நேரத்தில் களத்தை எதிா்கொண்டு, சிஎஸ்கேவுக்கு ஒரு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை ஜடேஜா உறுதிசெய்தாா் என்று கூறியுள்ளாா் முதல்வா்.