தமிழ்நாடு

சென்னையில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை!

தமிழகம் மற்றும் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை (நவ. 3) காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. 

DIN

சென்னை: தமிழகம் மற்றும் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை (நவ. 3) காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. 

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (நவ. 3) அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், நீலகிரி, கோயம்புத்தூா், திருப்பூா், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், தமிழகம், சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (நவ. 3) அதிகாலை காலை முதல் வானம்  மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில்,  மிதமான மழை பெய்து வருகிறது.  

சென்னை அம்பத்தூர், வில்லிவாக்கம், பெரம்பலூர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வடபழனி, வியாசர்பாடி, சென்ட்ரல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் துப்பாக்கியை எடுத்தால் பீரங்கியால் பதிலடி- பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அமித் ஷா எச்சரிக்கை

தென்காசியில் நவ. 9இல் சிறைக் காவலா், தீயணைப்பாளா் பணிகளுக்கான எழுத்துத் தோ்வு

காரைக்குடி அருகே நூல் வெளியீட்டு விழா

தென்காசியில் 5,000 பனைவிதைகளை நடவு செய்ய திட்டம்

சிறுபான்மையினருக்கு பொருளாதார மேம்பாட்டு சிறப்பு கடன்

SCROLL FOR NEXT